பொன்னேரி - தனி (SC) சட்டமன்றத் தொகுதி (Ponneri (SC) Assembly Constituency) |
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 2 தனித் தொகுதிகளில் பொன்னேரி தொகுதியும் ஒன்றாகும். இத்தொகுதி 1952ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. ஆந்திரப்பிரதேச எல்லையோரம் அமைந்துள்ள இத்தொகுதி எண் 2. பொன்னேரியில் வன்னியர், நாயுடு மற்றும் பட்டியலின சமூக மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். பொன்னேரி வட்டம், ஆரணி பேரூராட்சி, பொன்னேரி நகராட்சி , மீஞ்சூர் பேரூராட்சி, அத்திப்பட்டு நகரம், ஆகிய பகுதியில் இத்தொகுதியில் அமைந்துள்ளன. பிரபலமான பழவேற்காடு சுற்றுலாத்தலம் இந்த தொகுதியில்தான் அமைந்திருக்கிறது. மீன்பிடித்தல் மற்றும் விவசாயம் ஆகிய தொழில்களே இங்கு பிரதானமானவை. 1951 தொடங்கி 2021 வரை மொத்தம் 16 சட்டமன்றத் தேர்தல்களை, இந்தத் தொகுதி சந்தித்திருக்கிறது. அதில் அதிமுக 7 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், கம்யூனிஸ்ட் (சி.பி.ஐ) 1 முறையும், கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி 1 முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன. 1951-இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். ஆதலால் கிசான் மஜ்தூர் பிரஜா கட்சியைச் சேர்ந்த செங்கம் பிள்ளை மற்றும் கணபதி ரெட்டியார் இருவரும் சட்டமன்றத்துக்குத் தேர்வானார்கள். 1957-இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். ஆதலால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி. கோவிந்தசாமி நாயுடு மற்றும் டி.பி. ஏழுமலை இருவரும் சட்டமன்றத்துக்குத் தேர்வானார்கள். 2006, 2011, 2016 என 15 ஆண்டுகளாக அதிமுக வசமிருந்த பொன்னேரி தொகுதி, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகர் வெற்றிபெற, அந்தக் கட்சியின் வசம் தற்போது இருக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||